மூடுக

மாவட்டம் பற்றி

விருதுநகர் மாவட்டம், முந்தைய இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு அரசு ஆணை (பல்வகை) எண் 347 நாள் 08.03.1985 இல் புதிய மாவட்டமாக உருவானது. இம்மாவட்டம் தமிழ்நாட்டில் தென்பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் வடக்கில் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களும், தெற்கில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களும், கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டம் மேற்கில் கேரள மாநிலமும் மற்றும் வடமேற்கில் தேனி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் நிர்வாகத்தலைமையிடம் விருதுநகர் நகருக்குள் அமைந்துள்ளது. இம்மாவட்டம் மூன்று வருவாய்க்கோட்டங்களையும், பத்து வட்டங்களையும், முப்பத்தொன்பது ஃபிர்க்காக்களையும் (குறுவட்டங்கள்) அறநூறு வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது.

மாவட்ட சுருக்கக்குறிப்புக்கள் new blue

முனைவர். வீ ப ஜெயசீலன் இ.ஆ.ப.
முனைவர் வீ ப ஜெயசீலன் இ.ஆ.ப மாவட்ட ஆட்சியர்

மாவட்ட நிர்வாக அலகுகள்

  • வருவாய்த்துறைகோட்டங்கள் : 3
    வட்டங்கள் : 10
    உள் வட்டங்கள் : 39
    வருவாய் கிராமங்கள் : 600
  • வளர்ச்சித்துறைஊராட்சி ஒன்றியங்கள் : 11
    கிராம பஞ்சாயத்துகள் : 450
  • உள்ளாட்சி அமைப்புகள்மாநகராட்சி : 1
    நகராட்சிகள் : 5
    பேரூராட்சிகள் : 9
  • தொகுதிகள்பாராளுமன்றம் : 1
    சட்டமன்றம் : 7

மாவட்ட விவரங்கள்

பொது:

மாவட்டம்: விருதுநகர்
தலையகம்: விருதுநகர்
மாநிலம்: தமிழ்நாடு

பரப்பளவு:

மொத்தம்: 4241.0 ச.கி.மீ
ஊரகம்: 3794.3 ச.கி.மீ
நகர்புறம்: 446.7 ச.கி.மீ

மக்கள் தொகை:

மொத்தம்: 19,43,309
ஆண்கள்: 9,67,437
பெண்கள்: 9,75,872