மூடுக

வருவாய் நிர்வாகம்

வருவாய் கோட்டங்கள் – 3

விருதுநகர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக மூன்று வருவாய் கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. வருவாய் கோட்டம் சார் ஆட்சியர்/துணை ஆட்சியரின் தலைமையின் கீழ் இயங்குகிறது. இவர் கோட்ட நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். வட்டாட்சியர் மட்டத்தில் ஒரு தலைமை உதவியாளர் மற்றும் பணியாளர்களும் நிர்வாகத்தில் கோட்டாட்சியருக்கு உறுதுணையாக செயல்படுகிறார்கள். பணிகளை பொருத்த வரை வருவாய் கோட்ட அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியரகத்தின் ஒரு பிரதிபலிப்பாக இருந்து நிர்வாகத்தில் ஒரு இடைநிலை அலுவலகமாக செயல்படுகிறது. ஒவ்வொரு வருவாய் கோட்டமும் ஒரு சில வட்டங்களை உள்ளடக்கி அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்கிறது.

வருவாய் கோட்டங்கள் பல வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

வருவாய் வட்டங்கள் – 10

ஒவ்வொரு வட்டமும் வட்டாட்சியர் தலைமையில் இயங்குகிறது. அவர் வட்ட நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். ஒவ்வொரு வட்டமும் பல உள் வட்டங்களாகவும், அதன் கீழ் பல வருவாய் கிராமங்களை உள்ளடக்கியதாகவும் உள்ளது. நிலம், சட்டம் ஒழுங்கு, தேர்தல், துயர்துடைப்பு பணிகள், நில பரிமாற்றங்கள், வரி வசூல், நில ஆக்கிரமிப்பு அகற்றம், வீட்டு மனை பட்டா வழங்கல், மற்றும் சாதி, வருவாய், இருப்பிடம்,விதவை, வாரிசு,சொத்து மதிப்பு போன்ற பல சான்றிதழ்கள் வழங்குதல் வட்டாட்சியரின் முக்கிய பணிகளாகும்.

தலைமையிடத்து துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் சிறப்பு வட்டாட்சியர்கள் வட்ட நிர்வாகத்தில் வட்டாட்சியருக்கு உறுதுணையாக உள்ளனர்.

உள்வட்டங்கள் – 39

வருவாய் கிராமங்கள் – 600

வரிசை எண் வட்டத்தின் பெயர் வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை
1. இராஜபாளையம் 32
2. ஸ்ரீவில்லிபுத்தூர் 26
3. சாத்தூர் 53
4. சிவகாசி 36
5. விருதுநகர் 53
6. அருப்புக்கோட்டை 83
7. திருச்சுழி 150
8. காரியாபட்டி 107
9. வெம்பக்கோட்டை 37
10. வத்திராயிருப்பு 23

மேலும் விவரங்கள் (PDF 136 KB)