மூடுக

செய்தி வெளியீடுகள்

வடிகட்டு:

விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026

தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில்,மாநில தகவல் ஆணையர் திரு.வி.பி.ஆர்.இளம்பரிதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 51 KB)

மேலும் பல

சமூக விழிப்புணர்வு பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026

சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் தேசிய பேரிடர் மீட்புப் படை சார்பாக சமூக விழிப்புணர்வு “Familiarization And Mock Exercise scheme” ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. (PDF 73 KB)

மேலும் பல

தமிழ்நாடு கிராம தொழில் வாரியம் தலைமைச் செயல் அலுவலர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு கிராம தொழில் வாரியம் தலைமைச் செயல் அலுவலர் திரு.வ.சம்பத்,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.  (PDF 134 KB)

மேலும் பல

மாதிரி வாக்குப்பதிவு

வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வைப்பு அறையில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026-னை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு(Mock Poll) பணிகளை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 114 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026

திருவில்லிபுத்தூர் வட்டாரப்பகுதிகளில் வேளாண்மைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். (PDF 61 KB)

மேலும் பல

உலகம் உங்கள் கையில் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 09/01/2026

உலகம் உங்கள் கையில் திட்டத்தின்கீழ், 8,698 விலையில்லா மடிக்கணினிகளை உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கும் பணிகளை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 108 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது (PDF 78 KB)

மேலும் பல

கலைஞர் கனவு இல்லம் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்டு பயனடைந்த பயனாளியின் வீட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., திறந்து வைத்தார். (PDF 60 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 02/01/2026

திருவில்லிபுத்தூர் நகராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு அரசு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 53 KB)

மேலும் பல

களமாடு பல்திறன் போட்டிகள்-2025

வெளியிடப்பட்ட நாள்: 02/01/2026

களமாடு பல்திறன் போட்டிகள்-2025 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற 186 சமூக நீதி கல்லூரி விடுதி மாணவர்களை பாராட்டி கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 41 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 02/01/2026

திருச்சுழி வட்டாரப்பகுதிகளில் அரசின் பல்வேறுத்துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 76 KB)

மேலும் பல

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 02/01/2026

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், மருளுத்து கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கால்நடைகளுக்கான 8-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 42 KB)

மேலும் பல

வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 02/01/2026

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / சென்னை, தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் மரு.ஏ.அருண் தம்புராஜ்,இ.ஆ.ப., அவர்கள் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். (PDF 67 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 02/01/2026

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 139 KB)

மேலும் பல

பயிற்சி வகுப்பு

வெளியிடப்பட்ட நாள்: 30/12/2025

அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வு(JEE) பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 74 KB)

மேலும் பல

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 30/12/2025

விருதுநகர் மாவட்டம் குல்லூர்சந்தை மற்றும் மல்லாங்கிணறு ஆகிய இடங்களில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் திரு.மா.வள்ளலார்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 68 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு – SIR 2025

வெளியிடப்பட்ட நாள்: 30/12/2025

வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 44 KB)

மேலும் பல

மருத்துவ முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 26/12/2025

அரசு மற்றும் தன்னார்வ குழந்தைகள் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்காக நடைபெற்ற அரசு சேவைகள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 61 KB)

மேலும் பல

சிறப்பு கல்வி கடன் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 26/12/2025

சிறப்பு கல்வி கடன் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 74 KB)

மேலும் பல

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 23/12/2025

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத தகுதியான வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் வகையில், “வாக்காளர் என்பதை உறுதி செய்வீர்” என்ற தலைப்பில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை பதிவு செய்ய 27.12.2025, 28.12.2025, 03.01.2026 மற்றும் 04.01.2026 ஆகிய 4 நாட்களில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு […]

மேலும் பல

பிரதான் மந்திரி தான் தனிய கிரிஷி யோஜனா (PM-DDKY)

வெளியிடப்பட்ட நாள்: 23/12/2025

பிரதான் மந்திரி தான் தனிய கிரிஷி யோஜனா (PM-DDKY) திட்டம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் – இணைச்செயலாளர் (மத்திய உள்துறை அமைச்சகம்) திரு.பிரசன்னா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 61 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 23/12/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 48 KB)

மேலும் பல

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

வெளியிடப்பட்ட நாள்: 20/12/2025

எதிர்வரும்-2026 சட்டமன்றத் தேர்தலினை முன்னிட்டு, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்களின் விபரங்களை https://erolls.tn.gov.in/asd/ என்ற வலைதளத்தின் மூலம் அறிந்து கொண்டு, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாத நபர்கள் மற்றும் 18 வயதைப் பூர்த்தி செய்பவர்களும் விண்ணப்பங்களை 18.01.2026 வரை அந்தந்த வாக்குச்சாவடி நிலைஅலுவலர்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் ஆகியவற்றில் அளிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 99 KB)

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 20/12/2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 70 KB)

மேலும் பல

சிறப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 20/12/2025

நில உடைமை பதிவு செய்யாத விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்யும் வகையில் நடைபெற்ற சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார். (PDF 62 KB)

மேலும் பல