மூடுக

செய்தி வெளியீடுகள்

வடிகட்டு:

முதல் நிலை சரிபார்ப்பு(FLC)

வெளியிடப்பட்ட நாள்: 12/12/2025

விருதுநகர் மாவட்டம் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் 2026-னை முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, தேர்தலுக்கு முன்னதாக, தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல் நிலை சரிபார்ப்பைத்மாவட்ட தேர்தல் அதிகாரி /மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.

மேலும் பல

“Coffee With Collector” 209-வது கலந்துரையாடல்

வெளியிடப்பட்ட நாள்: 09/12/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 209வது காபி வித் கலெக்டர் (Coffee with Collector) கலந்துரையாடல் நிகழ்ச்சியில், குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்கள் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்தல்) சட்டம் 1986 மற்றும் குழந்தை தொழிலாளர் தடை செய்தல் மற்றும் முறைப்படுத்தல் திருத்தச் சட்டம், 2016இன் கீழ் மீட்கப்பட்ட 11 வளரிளம் தொழிலாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் கலந்துரையாடி, கல்லூரி தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்து உரிய வழிகாட்டுதலை வழங்கினார்.

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 09/12/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 49 KB)

மேலும் பல

படை வீரர் கொடி நாள் – 2025

வெளியிடப்பட்ட நாள்: 09/12/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற படை வீரர் கொடி நாள் – 2025 தேநீர் விருந்தில், ஒன்றுக்கு மேற்பட்ட மகன்களை ராணுவத்திற்கு அனுப்பிய பெற்றோருக்கு அரசு வழங்கும் ரூ.25,000 ஊக்கத்தொகை மற்றும் வெள்ளிப் பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 03/12/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 57 KB)

மேலும் பல

உலக எய்ட்ஸ் தினம்

வெளியிடப்பட்ட நாள்: 03/12/2025

‘ உலக எய்ட்ஸ் தினம் – டிசம்பர் 1” முன்னிட்டு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 69 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு – SIR 2025

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதி, வத்திராயிருப்பு தாலுகா, குன்னூர் பஞ்சாயத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் டாக்டர்.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., 28-11-2025 முதல் 30.11.2025 வரை அந்தந்த வாக்குச் சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொலைதூரப் பகுதிகளில் பணிபுரியும் மக்கள் தங்கள் படிவங்களைப் பெறவும், 2002 வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைக் கண்டறியவும், படிவங்களை நிரப்பவும், நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச் […]

மேலும் பல

கோரப்படாத வைப்புத்தொகைகள்

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில், உரிமை கோரப்படாத ரூ.7.74 இலட்சம் வைப்புத் தொகையினை, உரிய 17-பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 56 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு – SIR 2025

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

இராஜபாளையம் மற்றும் விருதுநகர் பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த முகாம் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.. (PDF 61 KB)

மேலும் பல

விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

பாலின சமத்துவத்திற்கான தேசிய அளவிலான பிரச்சாரம் 4.0 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 38 KB)

மேலும் பல

உறுதிமொழி

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டாச்சியர் அலுவலகத்தில், 76வது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தினத்தை முன்னிட்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை வாசித்தல் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அனைத்துத் துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் எடுத்துக் கொண்டனர்.

மேலும் பல

திடக்கழிவு மேலாண்மை நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

மக்களிடையே திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைத்து குடியிருப்புகளுக்கும் மக்கும் மற்றும் மக்காத குப்பைத் தொட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 43 KB)

மேலும் பல

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

வெம்பக்கோட்டை தாலுகா கொங்கன்குளம் பஞ்சாயத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்ற பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ.ஆர்.ஆர். ரகுராம் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக மூன்று சக்கர பேட்டரி சைக்கிள் கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிக்கு ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள வாகனத்தை வழங்கினார். (PDF 41 KB)

மேலும் பல

பாரட்டுச் சான்றிதழ்

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாரட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கி பாராட்டினார். (PDF 62 KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 60 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு – SIR 2025

வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் BLO செயலியில் (App) பதிவேற்றம் செய்யபட்டு வரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் பல

விருதுநகர் முதலீட்டாளர்கள் சந்திப்பு – 2025

வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025

விருதுநகர் முதலீட்டாளர்கள் சந்திப்பு – 2025 (Virudhunagar Investor Meet 2025)” மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 71 KB)

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 40 KB)

மேலும் பல

விழிப்புணர்வு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025

உலக நவீன வாசக்டமி இரு வார விழிப்புணர்வு முகாம் – 2025 விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 61 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு – SIR 2025

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2025

மாவட்டத்தில் 15,82,225 வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன – மாவட்ட தேர்தல் அதிகாரி / மாவட்ட ஆட்சியர் டாக்டர்.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., தெரிவித்தார். (PDF 135 KB)

மேலும் பல

சிறப்பு ஆலோசனை அரங்கம்

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2025

4 ஆவது புத்தகக் கண்காட்சியில், வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் – 2026 தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் பொது மக்களுக்கான சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கும் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் – 2026 சிறப்பு ஆலோசனை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. (PDF 130 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2025

விருதுநகர் வட்டாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டார். (PDF 129 KB)

மேலும் பல

மரக்கண்றுகள் நடும் விழா

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2025

ஆலமரம் அமைப்பின் 248 வது வார விழாவில் 1000 மரக்கன்றுகள் மற்றும் 5000 பனைமர விதைகள் நடவுசெய்யும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 59 KB)

மேலும் பல

SIR – கண்காணிப்பு மையம்

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2025

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் தேர்தல் ஆணைய வலைதளத்தில் பதிவுசெய்யும் பணிகளை கண்காணிக்கவும், குறைவான முன்னேற்றம் உள்ளவாக்குச் சாவடிநிலை அலுவலர்களைக் கண்டறிந்து பணிகளை துரிதப்படுத்துவதற்காகவும் கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது- மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆப., அவர்கள் தகவல். (PDF 39 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு – SIR 2025

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2025

மாவட்டத்தில் 2,07,026 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன- மாவட்டதேர்தல்அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 134 KB)

மேலும் பல