“Coffee with Collector” 208வது கலந்துரையாடல்
வெளியிடப்பட்ட தேதி : 22/07/2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் கல்லூரி மாணவர்களுடன் நடைபெற்ற 208வது “Coffee with Collector” கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப., மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரி தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு, இலங்கை தமிழ் மாணவர்களுக்கான திட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்து உரிய வழிகாட்டுதலை வழங்கினார்.